Wednesday, October 15, 2008

உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம்

உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் உடல் என்பது பல கோடி செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று தக்க விகிதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதால் இந்த உடல் அணு அடுக்கு மாறுபடாமல் இருக்கிறது. உடலின் வலு குறைந்தால் அணு அடுக்கு மாறுபட்டால் உடல் நோயையோ,மரணத்தையோ சந்திக்கும் இதிலே உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இப்போது நாம் உண்ணும் உணவு 7 தாதுக்களாக மாற்றம் பெறுகிறது. இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மச்சை, சூக்கிலம் (வித்து,நாதம்) இப்படித்தான் ஒவ்வெரு தாதுக்களாக பிரிக்கபடுகிறது. இதிலே கடைசியாக பிரித்து எடுக்க படுகின்ற தாது சூக்கிலம் எனப்படும். சூக்கிலம் சக்தியை மையமாக கொண்டுதான் உயிர் உடலுக்குள் இயங்குகிறது. இரத்த சூக்கில சக்திதான் இன்னொரு உயிரை படைக்கும் ஆற்றலை பெற்றுள்ளது. பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பருவ வயதை அடையும் போதுதான் இந்த சூக்கிலம் என்ற சக்தி உடலில் ஏற்படுவதாக கருதுகிறார்கள் அது முற்றிலும் தவறான கருத்து. ஒரு குழந்தை பிறக்கும் போதே சூக்கில சக்தி அதன் உடலினுள் இருந்து கொண்டிருக்கிறது. அது மூன்று வயது வரை மூளையுடைய வளர்ச்சிக்காகவும் 3 முதல் 14 வரை உடல் உடைய வளர்ச்சிக்காகவும் செயல் படுகிறது. எனவே தான் 3 வயதுக்குள் ஏதாவது பாதிப்பு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அது மூளையை உடனடியாக பாதிக்கும். அந்த பாதிப்பு நீடித்தால் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை மூளை வளர்சி குன்றிய குழந்தையாக மாறிவிடும். இந்த சூக்கிலம் என்ற சக்தி 3 வயதுக்கு பிறகு 14 வயது வரை உடல் வளர்ச்சிக்கு முழுமையாக செயல் படுகிறது. உடல் முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்னர் சூக்கிலம் என்ற (வித்து,நாதம்) வித்து கமலபையில் அதாவது (Sexual gland) அதில் வந்து நிரம்பபெறும். அப்படி ஆகும் போது தான் பெண்ணோ, ஆண்ணோ, பருவ வயதை அடைகிறார்கள். இந்த சூக்கிலம் என்கிற ஜீவ வித்துக்குழம்பு வாழ்க்கையில் மிகவும் அடிப்படையாக அமைந்துள்ளது. அதை பற்றி சிறிது பார்ப்போம்.
1. Physical body (பரு உடல்)
2. Sexual vital (ஜீவ வித்து குழம்பு)
3. Life Force (உயிர்ச் சக்தி)
4. Bio-magnetism(ஜீவ காந்தம்)
5. Mind (மனம்)
இந்த ஐந்தின் ஒரு சேர இயக்கமே மனிதன் என்கிற வடிவமாகும். பரு உடல் என்பது கோடி கணக்கான சிற்றறைகள் ( Cells) சேர்ந்து இயங்கும் இயக்கமே. சிற்றறைக்கு இரு புறமும் காந்த கவர்ச்சி உண்டு. காந்த கவர்ச்சி என்பது ஜீவகாந்தம் ஆகும். இது உயிர்ச்சக்தி உடலுக்குள் சுழன்று இயங்குவதால் எழும் அலையாகும்.ஓர் உடலில் உள்ள உயிர்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில் தான் உடலில் உள்ள சிற்றறைகளின் அடுக்கு குலையாமல் நிலைத்து இருக்கும். இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம் இம்மூன்றும் சிதறாது ஒழுங்காக ஓடி, உயிருக்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை நிலைக்கச் செய்யும். எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவகாந்தத்தைப் பெருக்க வேண்டுமெனில், அதற்கு வேண்டிய எண்ணிக்கையுள்ள உயிர்த்துகள்கள் தேவை.உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் பொறுத்திருக்கும். போதிய அளவு விந்து (ஆண் வித்து) அல்லது நாதம் (பெண் வித்து) இருந்தால் தான் உடலை நடத்தப் போதுமான ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலில் உயிர்ச்சக்தித் துகள்கள் நிலைத்திருக்கும். இந்த வகையில் பார்க்கும் போது (விந்து, நாதம்) என்கிற சூக்கில சக்தியின் பெருமையை புரிந்து கொள்ள முடியும்.

No comments: