Monday, June 9, 2008

சூரிய‌ன்..

சூரிய‌ன்..
சூரிய‌ன் என்ப‌து நட்ச‌த்திர‌ம். நாம் இர‌வில் காணும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் அனைத்தும் ஒரு சூரிய‌னே. நாம் வாழ்ந்து கொண்டு இருப்ப‌து ஒரு சூரிய‌ குடும்ப‌த்தில் ந‌ம‌க்கு தெரிகின்ற‌ சூரிய‌ன் ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌ட‌ங்கு பூமிக்கு அருகில் உள்ள‌து. என‌வே தான் ந‌மக்கு ப‌க‌லில் சூரிய‌ன் காட்சிய‌ளிக்கிற‌து.

பூமியில் இருந்து 9 கோடி 30 ல‌ட்சம் மைல்க‌ள் தொலைவில் சூரிய‌ன் உள்ள‌து. இத‌ன் விட்ட‌ம் சுமார் 8 ல‌ட்ச‌ம் 70 ஆயிர‌ம் மைல்க‌ள் ஆகும். இது ஒரு முறை த‌ன்னைத்தானே சுற்றி கொள்ள‌ 27 நாட்க‌ள் 9 ம‌ணி 7 நிமிட‌ம் எடுத்து கொள்கிற‌து.சூரிய‌ன் ம‌ற்ற‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளைப்போல் ஹைட்ர‌ஜ‌ன் வாயுக்க‌ளால் ஆன‌ நெருப்புக்கோள‌மாகும். அது த‌ன்னைத்தானே சுற்றி கொள்வ‌தால் அத‌ன் மைய‌ப்ப‌குயில் ஏற்ப‌டும் அனுச்சேர்க்கை ( Nuclear Fusion) கார‌ண‌மாக‌ அனுச்சிதைவு ஏற்ப‌ட்டு, இலேசான‌ ஹைட்ர‌ஜ‌ன் அனுக்க‌ள் க‌ன‌மான‌ ஹீலிய‌ம் அனுக்க‌ளாக‌ மாறுகின்ற‌ன. அப்ப‌டி ஹைட்ர‌ஜ‌ன் ஹீலிய‌ம் அனுக்க‌ளாக‌ மாறும் போது ஏற்ப‌டும் பொருள‌ழிவே ச‌க்தியாக‌ வெளிப்ப‌டுகிற‌து. அந்த ச‌க்தி ஹைட்ர‌ஜ‌ன் குண்டு வெடிப்பில் ஏற்ப‌டும் ச‌க்திக்கு ஒப்பான‌து.இதை விஞ்ஞானிக‌ள் ஒரு வினாடிக்குச் சூரிய‌னில் ஒரு டிரில்லிய‌ன் ப‌வுண்டு ஹைட்ர‌ஜ‌ன் அழிவ‌தாக‌க் க‌ண‌க்கிட்டுள்ளார்க‌ள்.

சூரிய‌ன் பூமியை விட‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ம‌ட‌ங்கு பெரிய‌து. சூரிய‌ன் விளிம்பு ப‌குதியில் 6,000 செ. வெப்ப‌ நிலை என்றும் மைய‌ப்ப‌குதியில் 14,000,000 செ. என்றும் க‌ண‌க்கிட்டுள்ளார்க‌ள். இதை க‌ற்ப‌னை செய்ய‌ முடிகிற‌தா?

நாம் பூமியில் பார்க்கின்ற‌ சூரிய‌ ஒளி சூரிய‌னின் மேற்ப‌ர‌ப்பில் இருந்து பூமியை வ‌ந்து அடைய‌ 8 நிமிட‌ம் 18 வினாடிக‌ள் எடுத்துக் கொள்கிற‌து. ஆனால் இந்த‌ ஒளி சூரிய‌ன் மைய‌ப்ப‌குதியில் இருந்து மேற்ப‌ர‌ப்பை வ‌ந்து அடைய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ள் எடுத்து கொள்வ‌தாக‌ விஞ்ஞான‌ம் சொல்கிற‌து.

சூரிய‌னிலிருந்து வ‌ரும் உயிரின‌ங்க‌ளுக்கு கெடுத‌ல் செய்யும் த‌ன்மையுடைய‌து. ஆனால் பூமியைச் சுற்றிக் க‌வ‌ச‌ம் போல் அமைந்துள்ள‌ காற்று ம‌ண்ட‌ல‌த்திலுள்ள‌ ஓசோன் ப‌ட‌ல‌ம் அவ‌ற்றைத் த‌டுத்து உயிர்க‌ளைக் காக்கிற‌து. சூரிய‌னிலிருந்து வ‌ரும் ஒளிக்க‌திர்க‌ள் ஆர‌ஞ்சு நிற‌மான‌து இந்த‌ ஒளிக்க‌திர்க‌ள் பூமியின் இய‌க்க‌த்திற்கு ச‌க்தி அளிக்கிற‌து. இந்த‌ ச‌க்தி பூமியில் விழுவ‌தால் தான் எங்கும் நிற‌ந்து இருக்கின்ற‌ இருள் நீங்கி ப‌க‌லை காண்கிறோம்.
அடிக்கின்ற‌ காற்று..
எழுகின்ற‌ மேக‌ம்..
பொழிகின்ற ம‌ழை..
பெய்கின்ற‌ ப‌னி..
துளிர்கின்ற‌ தாவ‌ர‌ங்க‌ள்........ இவை அனைத்திற்கும் ஒரு கார‌ண‌ம் சூரிய‌ன் தான். 9 கோடி மைல்க‌ள் அப்பால் இருந்து கொண்டு பூமியில் வாழ்கின்ற‌ உயிர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ சூரிய‌னை என்ன‌ சொல்வ‌து! இத‌னால்தான் சோதிட‌ம் இதை ம‌னித‌ வாழ்க்கையில் வெற்றியையும், ம‌கிழ்ச்சியையும், வாழ்க்கை வ‌ள‌ங்க‌ளையும் அளிக்க‌க்கூடிய‌து என்கிற‌து.

Sunday, June 1, 2008

நான் யார் ?

மீன்டும் எல்லோருக்கும் வ‌ண‌க்க‌ம்.

இதுவ‌ரை நாம் அடுத்த‌வ‌ர்க‌ளை பார்த்து நீ யார் என்று கேட்டு இருக்கிறோம்..
இன்று ந‌ம்மை பார்த்து நாம் கேட்போம்

"நான் யார்?".

நான் என்ற‌ ஒன்று "என‌து" என்று த‌ன‌க்கு ப‌ல்வேறு உட‌மைக‌ளை சேர்த்து கொண்ட‌து. அப்ப‌டி சேர்க்க‌ ப‌ட்ட‌வைக‌ள் பொருளாக‌வும், உயிர் ஆக‌வும் இருக்க‌லாம். என் வீடு, என் சொத்து, என் அலுவ‌ல‌க‌ம் என்று பொருள் சார்ந்ததையும் என் உற‌வுக‌ள், என் ம‌னைவி, என் ந‌ண்ப‌ன் என்று உயிர் சார்ந்த‌வைக‌ளையும், என‌து என்று சொல்லி கொண்டு இருக்கிற‌து.

நான் என்ப‌து அழியுமா?
அழிவ‌ற்ற‌தா?
நான் என்று சொல்லி கொண்டு இருப்ப‌து யார்?
இந்த‌ உட‌லா?

இந்த‌ உட‌ல் தான் என்றால் நாம் இதை ஏன் என‌து உட‌ல் என்று சொல்கிறோம். என‌து என்று வ‌ந்தாலே ஏதோ ஒன்று த‌ன்க்கு சார்ந்த‌ ஒன்றை என‌து என்று குறிப்பிடுகிற‌து. அப்ப‌டி என்றால் இந்த‌ உட‌ல் நான் அல்ல‌.
உண்மையான‌ நான் என்ப‌து அழிவ‌ற்ற‌து. புல‌ன் ம‌ய‌க்க‌த்தில் இருக்கின்ற‌ ந‌ம‌க்கு இந்த‌ உல‌க‌ம் த‌ரும் இன்ப‌த்தை அனுப‌வித்து அத‌ன் வ‌ழியே வாழ்ந்து வ‌ருவ‌தால் உண்மையான‌ நான் என்ப‌தை க‌ண்டு பிடிக்க‌ முடிய‌வில்லை. க‌ண்டு உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் கூறும் கூற்றையும் ஏற்று கொள்ள‌ முடிய‌வில்லை. கார‌ண‌ம் ம‌னித‌ன் த‌னக்கு என‌ ஒரு எல்லையை வ‌குத்து கொண்டு அதில் கிடைக்கும் இன்ப‌ங்க‌ளை ஐம்புல‌ன்க‌ள் வ‌ழியாக‌ அனுப‌வித்து கொண்டு இருக்கிறான். அதில் அள‌வு முறை மீறும் போது துன்ப‌ம் என்ற‌ உண‌ர்வு வ‌ருகின்ற‌து. அப்போது தான் தெய்வ‌ம் என்ற‌ ஒன்றை தேட‌ துவ‌ங்குகிறான். ஏன் இப்போது தேட‌ வேண்டும் எல்லாம் த‌ன்னை விட்டு போய்விடுமோ என்ற‌ ப‌ய‌ம்.

ஆனால் உண்மையில் நான் என்ப‌து அழிவற்ற‌து. ஏன் என்றால் அதுவே முழுமை நிலை.
எப்ப‌டி என்று பார்க்க‌லாம்:

உட‌ல் உட‌லினுள் உயிர் என்ற‌ ஒன்று உயிரின் சுழ‌ற்ச்சி வேக‌ம் கார‌ண‌மாக‌ அதில் இருந்து எழுவ‌து தான் ஜீவ‌ன் எனும் ஜீவ‌ காந்த‌ம். இது மூளை வ‌ழியாக செய‌ல்ப‌டும் போது ம‌ன‌மாக‌வும், புல‌ன்க‌ள் வ‌ழியாக‌ செய‌ல்ப‌டும் போது உண‌ர்வாக‌வும் இருக்கிற‌து. இந்த‌ ஜீவ‌ காந்த‌ம் ஒரு நிலையில் அட‌க்க‌ம் பெற்றால் அது நான் என்ப‌து தெளிவுக்கு வ‌ரும்.

ஜீவ‌ன் என்று த‌னியாக இய‌க்கும் போது த‌ன்க்கு ஒரு எல்லையை உருவாக்கி கொண்டு இது தான் நான் என்று நினைத்து கொண்டு இருக்கின்ற‌து. ம‌ன‌ம், த‌ன்னுள்ளே அட‌க்க‌ம் பெறும் போது, நான் என்ப‌து த‌னித்து இல்லை எல்லாம் த‌ன்க்குள்ளே இருப்ப‌தை காணும் போது, த‌ன்க்குள்ளே இறை த‌ன்மை வெளிப்ப‌டும் போது அந்த‌ இறை த‌ன்மையே நான் என்று உண‌ர்ந்து கொள்கிறான். சுருங்க‌ சொன்னால் அப்போதுதான் "இறை நிலையே நானாக‌" வ‌ந்துள்ள‌து என்ப‌தை உண‌ர‌ முடியும்.
"நான் என்ப‌து இறை நிலையே" ஆகும்.