Thursday, September 25, 2008

வலி, நோய், மரணம்

இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் என்ற முன்றில் ஒன்று ஏதாவது ஒரு காரணத்தால் தடைப்பட்டாலும் திசை மாறினாலும், வெறியேறினாலும், அளவில் குறைந்தாலும், ஓட்டத்தில் குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அனு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.ஓர் ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும், மற்ற இரண்டு ஓட்டங்களிலும் தடை உண்டாகும். அங்கு மின்குறுக்கு ஏற்படும். இந்த தடை அல்லது தேக்கமே வலியாக உணரப்படுகிறது.இந்த தடை சிறிது நேரம் நீடிக்கும் போது அது "வலி".இந்த வலி இடத்தால் விரிந்தும், காலத்தால் நீடித்தும் இருக்கும் போது அது "நோய்" எனப்படுகிறது.பொதுவாக வலி ஏற்பட்டவுடனேயே அதை சரி செய்வதற்கு உயிர்த்துகள்கள் தடை ஏற்பட்ட இடத்திற்கு வரும். தற்சுழற்சி வேகம் அதிகம் கொண்டு அதிக சிவகாந்த ஆற்றலை தந்து அந்த வலியை சிறிது நேரத்திலேயே போக்கி விடும். இயற்கையாகவே உடலைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இத்தன்மை உயிர்த்துகளுக்கும் மாறி மின்குறுக்கு ஏற்படும் போது தான் வலி நோயாக மாறுகிறது. சீவகாந்த இருப்பை அதிகம் சேமித்து வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கும்.அதற்கும் மேலாக உடலில் உள்ள ஆற்றல் வெகுவாக குறைந்து ஈடு செய்ய முடியாத நிலையில் உடலின் இயக்கங்கள் நின்று விடுவதே "மரணம்" எனப்படுகிறது.விந்துநாதக் கலயத்தில் மின்குறுக்கு ஏற்பட்டு அது உடைந்து விந்துநாதம் முழுவதுமே வெளியேறி விடுவதே மரணமாகும்.உடலிலுள்ள எந்த உறுப்பிலும் எந்த நோய் இருந்தாலும் அந்த இடம் உடலிலுள்ள சீவகாந்த ஆற்றலை வீணாக்கும் ஓட்டையாகி விடுகிறது. ஒரு நோயினால் சீவகாந்தத்தின் வெளியேற்ற அளவுக்கு ஏற்ப நிமிடங்களிலோ, மணிக்கணக்கிலோ, சில நாட்களிலோ, மாதங்களிலோ, ஆண்டுகளிலோ உடலிலுள்ள காந்த ஆற்றல் முழுவதுமே வரண்டு போகலாம். அதன் விளைவாக இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் ஆகியவை சீர்கெட்டு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து விடுவதால் மரணம் ஏற்படும்.

No comments: