Showing posts with label ஆனந்தமும். Show all posts
Showing posts with label ஆனந்தமும். Show all posts
Tuesday, August 5, 2008
அமைதியும், ஆனந்தமும் உன் உள்ளா, உனக்கு வெளியேயா?
மனிதன் வாழும் காலத்தில் தெரிந்தோ, தெரியாமலோ அமைதியையும், ஆனந்தத்தையும் தேடுகிறான். அதற்காக வாழும் காலத்தில் பொருட்களை ஈட்டுகிறான். எனக்கு இப்படி பல செல்வங்கள் இருந்தால் நான் அமைதியாக இருப்பேன் என்று அவற்றை பெற போராடுகிறான். முடிவில் அவற்றை பெற்று கொள்கிறான். ஆனால் எதை தேடினானோ அதை தேடும்போது இருந்த அமைதி கூட அதை பெற்ற பிறகு பெறப்பட்டவனிடம் இல்லை. ஏன் வாழும் காலம் நீடிக்க நீடிக்க தன்னிடம் இருந்த அமைதியை தொலைத்து விடுகிறான். தான் தேவையானவற்றை பெற்று கொள்கிறான். தன்னுடைய வசதிகளை பெருக்கி கொள்கிறான். ஆனால் அவனிடம் அமைதியும், ஆனந்தமும் வற்றி விடுகிறது. இதற்கு காரணம் என்ன?கோவிலுக்கு செல்கிறான், அங்கே அமைதி கிடைக்கிறது என்று கூறுகிறான். அங்கே அமைதி கிடைக்கிறதா? இல்லை. அவன் அங்கே அமைதியாக இருக்கிறானா? தான் தன்னுடைய மனதை அமைதியாக வைக்காதவரை அமைதியும், ஆனந்தமும் எதில் இருந்து கிடைக்கும் என்று வெளியே தேடிக்கொண்டு இருப்பான். ஆனால் அந்த அமைதியும், ஆனந்தமும் தன்னுள் இருப்பதை பார்க்க தொடங்கிவிட்டால், தான் என்றும் போல தனக்கு தேவையானவற்றை பெருக்கி கொள்வான். ஆனால் அவற்றால் ஒரு பாதிப்பு ஏற்படாதவாறு தன்னை பாதுகாத்து கொள்வான். அந்த சூழ்நிலையில் வாழ கற்று கொண்டு விட்டால் வாழும் காலம் அமைதியும், ஆனந்தமும் தான். தன் உள்ளே இருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் பெற்று கொண்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
Labels:
அமைதி,
அமைதியும்,
ஆனந்தமும்,
ஆனந்தம்
Subscribe to:
Posts (Atom)
